அரையாண்டு விடுமுறையில் எக்காரணத்தைக் கொண்டும் சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தக்கூடாது.! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை திடீரென அரையாண்டு விடுமுறை பயன்படுத்த சிறப்பு வகுப்புகள் எக்காரணத்தை கொண்டு நடத்தக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான மாணவ மாணவிகளுக்கும் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கியது 6 8 10 12 வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் 7 9 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதனையில் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு காலை மாலை என தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு இன்று கடைசி நாளை எட்டியுள்ளது இன்றுடன் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைய இருக்கிறது ஏற்கனவே பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அரையாண்டு தேர்வு எழுதி முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவு விட்டது.

மேலும் பொது தேர்வை எதிர் கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அசைன்மெண்டுகளை மட்டும் வழங்கலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Comment