விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் சூரி.! அண்ணனை நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்ய போகும் சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது ரிலீசாக காத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுதலை திரைப்படத்தில் சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சூரி அவர்கள் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதை பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் மறுபடியும் மற்றொரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  மதுரையில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமான இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் அவர்கள் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது அந்த வகையில் இவர்களது நடிப்பில் வெளியான மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமா ராஜா, டான், நம்ம வீட்டு பிள்ளை, உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது சூரி அவர்கள் கதாநாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க முன் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment