சூரியை வைத்து இயக்கும் வெற்றிமாறன் திரைப்படத்தின் தலைப்பு இதுதான்.! அட சூரிக்கு இப்படி ஒரு கதையா.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் பல ஹிட்டடித்து வெற்றி பெற்றுள்ளன, அந்த வகையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படமும் ஹிட்டு தான். அதேபோல் இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும்.

கடைசியாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகிய வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்களது கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, அது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

இந்த நிலையில் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, இந்த நிலையில் திடீரென காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார், இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் பல முன்னணி நடிகர்கள் இவர் திரைப் படத்தில் நடிப்பதற்காக லிஸ்டில் இருக்கும் இந்த நேரத்தில் காமெடி நடிகர் சூரியை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதனால் இவர்களின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் குழம்பி வருகிறார்கள், இந்த நிலையில் வெற்றிமாறன் சூரி திரைப்படத்தை இயக்குவதற்காக விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தை கூட தவிர்த்துள்ளார் என கூறப்படுகிறது. பொதுவாக வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே ஏதாவது ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் சூரி மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமும் ஒரு நாவல் அடிப்படையில் உருவாக இருக்கிறதாம் அந்த நாவலின் பெயர் அஜ்னபி, இந்த திரைப்படம் முழுக்க முழுக்க துபாயில் படமாக்கப்பட இருக்கிறது ஆனால் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த திரைப்படத்தை இந்தியாவிலேயே படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் வெற்றிமாறன்.

பொதுவாக சூரி திரைப்படத்திற்கு அந்த நாவலின் பெயரான அஜினபி என்ற டைட்டிலையே வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் சூரியும் சமீப காலமாக அதிக தாடி வளர்த்துக் கொண்டிரக்கிறார்.

Leave a Comment