நான் ரொம்ப மிஸ் பன்றன்..! சூரரைப்போற்று ரிலீஸ் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி ஓபன் பேட்டி..!

soorarai potru movie ott release related abarbna balamurali latest speech : பிரபல இசை அமைப்பாளற்க்கும் பாடகிக்கும் மகளாக பிறந்தவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் பாரம்பரிய நடனத்தை பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்டவர் அதுமட்டுமில்லாமல் நடிகை அபர்ணா பாலமுரளி ஒரு சிவில் இன்ஜினியர் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை சேர்ந்தவர் என்பதன் காரணமாக முதன்முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் இதுவரை இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மிக குறைந்த அளவு முதலீட்டை போட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆனால் தற்சமயம் எடுக்கப்பட்ட சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படமானது மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஹீரோயின் இவர்தான் என்று கூறியபோது பல ரசிகர்களும் முகம் சுழித்தார்கள் ஆனால் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் அபர்ணா பாலமுரளியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துளளார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்கள் அவர்களிடம் நீங்கள் உங்கள் திரைப்படத்தை தியேட்டரில் வெளிவரும் என நினைத்து இருப்பீர்கள் ஆனால் ott யில் வெளிவந்ததை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு நடிகை அபர்ணா பாலமுரளி திரையரங்கம் சென்று திரைப்படம் பார்த்தால் குறிப்பிட்ட சில மணி நேரம் கட்டாயமாக அமர்ந்து சினிமா பார்ப்போம் ஆனால் தற்சமயம் டிவி மொபைல் என்ற பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் திரைபடத்தை பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியம் உண்டாகி விடுகிறது.

அதுமட்டுமில்லாமல் தியேட்டரில் ரிலீஸ் அன்று கொண்டாடப்படும் கொண்டாட்டத்தை நான் மிஸ் செய்கிறேன் என கூறி உள்ளார்கள்.

abarna
abarna

Leave a Comment