வலியுடனும் வேதனையுடனும் தான் செல்வராகவனை விட்டு பிரிந்தேன்.! பல வருடம் கழித்து சோனியா அகர்வால் பரபரப்பு பேட்டி.

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார் இவர் இயக்கத்தில் வெளியாகி பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் செல்வராகவன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் புதுப்பேட்டை, மதுர, பாலக்காட்டு மாதவன், என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் இந்த நிலையில் சோனியா அகர்வால் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அதன்பின் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு செல்வராகவன் தன்னுடன் இருந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோனியா அகர்வால் மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் சோனியா அகர்வால் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் சோனியா அகர்வால் செல்வராகவனை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் திருமணத்தின் பொழுது இருவரும் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தோம் ஆனால் ஒரு சில காரணங்களால் பிரிய  வேண்டிய நிலை ஏற்பட்டது இருந்தாலும் மிகுந்த வலியுடன் வேதனையுடன் தான் செல்வராகவனை விட்டுப் பிரிந்தேன் எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment