செல்வராகவனை விட என் கொழுந்தனார் தான் அந்த விஷயத்தில் டாப்.. வெளிப்படையாக சொன்ன சோனியா அகர்வால்

Sonia agarwal : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகை சோனியா அகர்வால். இவர் முதலில் “காதல் கொண்டேன்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடன் நடிப்பு பெரிய அளவில் கவர்ந்து இழுத்தது. அதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே, சதுரங்கம், பாலக்காட்டு மாதவன்..

ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு  என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த இவர் செல்வராகவனை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.  இவர்கள் பிரிவுக்கு  காரணம் சோனியா அகர்வால் குடிப்பழக்கம் இருந்தது அதனால் தான் குடும்பத்தில் பிரச்சனை வந்து விவாகரத்து பெற்று பிரிந்தனர் என கூறுகின்றனர் ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் சொன்னது என்னவென்றால்..

திருமணத்திற்கு பின்னர் நான் நடிக்கவே கூடாது என செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்ததாகவும் அதனால் நான் ஒரு வருடம் நடிப்பிற்கு கேப் விட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன் அதன் பின்னர் குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் குடும்பத்தை எதிர்த்து மீறி நடித்தேன் அதனால் செல்வராகவனின் குடும்பத்தினர் விவாகரத்து பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணினார் என பகீர் கிளப்பினார்.

அதனைத் தொடர்ந்து சமிபத்திய பேட்டியில் சோனியா அகர்வால் நான் காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வந்த பொழுது என்னுடைய அம்மாவிற்கு தனுஷின் தோற்றத்தை பார்த்ததும் இவரெல்லாம் ஹீரோவா என அவரை  குறை சொல்லிக்கொண்டே இருந்தார் பின்னர் நான் என் அம்மாவிற்கு செல்வராகவன் சார் மிகச் சிறந்த இயக்குனர் அவர் தன் படங்களுக்கு கச்சிதமான நடிகர்களை தான் தேர்வு செய்வார் அப்படித்தான் தனுஷின் ரோல் படத்தில் இருக்கும் என எடுத்து கூறினேன் அதன் பிறகு அமைதியானார் என தெரிவித்தார்.

Actress Sonia agarwal
Actress Sonia agarwal

மேலும் பேசிய அவர் உண்மையில் சொல்லப் போனால் செல்வராகவனை விட தனுஷ் ரொம்ப நல்லவர் படத்தின் காட்சிகள் சரி வரவில்லை என்றால் செல்வராகவன் மோசமாக எங்களை திட்டுவார் காட்சிகள் முடிந்த பிறகு கூட சமாதானம் செய்ய மாட்டார் தனுஷ் வந்து தான் அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்று சொல்லுவார் அந்த குணம் தனுஷிடம் இருக்கிறது என சோனியா அகர்வால் தெரிவித்தார்.