அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மாஸ்டர் பிளான் போட்ட மகன்.! விசாரணையில் வெளிவந்த பகிர் தகவல்.! ஐயோ பாவம்

அரசு வேலைக்காக ஆசைப்பட்டு பெற்ற தந்தையே மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா பெடபள்ளி மாவட்டம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான நபர் அம்மாநில அரசு நடத்தும் சிங்கரேனி கொலியரீஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி காலை தனது அப்பா மாரடைப்பால் இறந்து விட்டதாக ஊர் மக்களிடம் மூத்தமகன் கூறியுள்ளார்.

மூத்த மகன் திடீரென இவ்வாறு கூறியதால் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது அதனால் பொலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர், தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்கள், மாரடைப்பால் இறந்துவிட்டார் என மூத்த மகன் கூறியதால் விசாரணையை மூத்த மகனிடம் இருந்து ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இதுகுறித்து தெரிவித்த போலீஸ் கமிஷனர் சத்தியநாராயணா விசாரணையில் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மூத்த மகனே தனது தந்தையை கொலை செய்துள்ளார், இதற்கு இறந்தவரின் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் 25 வயதான மூத்த மகன் டிப்ளமோ படித்துள்ளார்.

பணியில் இருக்கும் பொழுது தனது தந்தை இறந்து விட்டால் தனக்கு வேலை கிடைத்துவிடும் என நினைத்து கொலை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக மாரடைப்பு என நாடகம் நடத்தி உள்ளார், இந்த நிலையில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்கள்.

இப்படி அரசு வேலைக்காக பெற்ற தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment