விஜே சித்ரா வாட்ஸ் ஆப்புக்கு மெசேஜ் செய்த நபர்.!! மேலும் தீவிர விசாரணையில் போலீஸ்.!! யார் அந்த நபர்..

Chitra is the person who sent the message to the WhatsApp. !! Police in more serious investigation. !! Who is that person .விஜே சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் இவர் தற்கொலை தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன,  இவர் உண்மையிலேயே தற்கொலைதான் செய்து கொண்டாரா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையாக சித்ரா தற்கொலை செய்து கொண்டபோது அவருடன் உடன் இருந்தவர் வருங்கால கணவர் ஹேம்நாத்.அவரிடம் முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடர்ந்தார்கள்.  அதன்பிறகு சித்ராவின் செல்போனை கைப்பற்றி அதில் ஆய்வு செய்த போலிசாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் சித்ராவின் செல்போனுக்கு அடிக்கடி தினேஷ் என்பவர் போனில் பேசி இருப்பதாக தெரிகிறது அவர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது தினேஷ் தான் சித்ரா கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாக்களையும் ஏற்பாடு செய்து வந்தவர் என தகவல் கிடைத்துள்ளது.

அதனால் சித்ரா குறித்து தீவிர விசாரணை தினேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடைத் திறப்பு விழாவிற்கு சென்று இருக்கிறார்.

அந்தக் கடைத் திறப்பு விழாவில் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் சித்ராவிற்கு அறிமுகமாகியுள்ளார். அப்பொழுது அந்த அரசியல் பிரமுகர் சித்ராவின் செல்போனுக்கு குட் மார்னிங் குட் நைட் என மெசேஜ்களை முதலில் அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு இருவரும் நட்பாக மெசேஜ் செய்து பழகி இருக்கிறார்கள், அந்த வாட்ஸ்அப் மெசேஜ் வைத்துக்கொண்டு அந்த அரசியல் பிரமுகர் இடமும் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சித்ராவின் செல்போனில் சில தடயங்களை அழித்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் கூறி உள்ளார்கள்,  அதனையும் மீட்டெடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீஸ் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment