வெறும் 35 நாட்களுக்கு இத்தனை கோடி சம்பளமா.? தயாரிப்பாளர்களை அலறவிடும் நயன்தாரா..

நடிகை நயன்தாரா தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவில் உள்ள ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் நயன்தரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டது பிறகு வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டது இவை அனைத்தும் தெரியும் திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து விட்டதாக பலரும் கூறி வருகிறார்கள்.

ஆனால் அது உண்மை இல்லை என்பதுதான் தற்பொழுது தெரியவந்துள்ளது அதாவது திருமணத்திற்கு முன்பு வரை ஐந்து முதல் ஏழு கோடி வரை சம்பளம் பெற்று வந்த நயன்தாரா தற்பொழுது 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம் அந்த வகையில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படத்தில் 35 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளனர் 10 கோடி சம்பளம் கேட்டு அனைவரையும் விரல வைத்துள்ளார்.

மேலும் படத்தில் நடித்தால் தாலியை கழட்ட மாட்டேன் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என ஏராளமான கண்டிஷங்களை போட்டுள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில் முன்பை விட தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

Leave a Comment

Exit mobile version