அது நான் நடிக்க வேண்டிய படம் ஆனா கடைசியில் அந்த நடிகை நடிச்சிட்டாங்க..! பல வருடம் கழித்து புலம்பி தள்ளும் சினேகா..

sneha : தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயர் பெற்றவர் நடிகை சினேகா இவர் சிரிப்பழகி என அழைத்து வருகிறார்கள் மேலும் நடிகை சினேகா பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர்.

இவரின் உண்மையான பெயர் சுகாஷினி. ஆனால் படங்களில் நடிப்பதற்காக சினேகா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார் மாதவனோடு நடித்த என்னவளே என்ற திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படம் அதேபோல் சினேகா பல திரைப்படங்களில் ஹோமிலியான லுக்கில் நடித்துள்ளார்.

முத்துன கத்திரிக்கா வீட்ல இருக்கும் பொழுது பிஞ்சு கத்திரிக்காவுக்கு அதுக்குள்ள கல்யாணமா.?

அதேபோல் ஆட்டோகிராப் திரைப்படத்தில் சேரனுடன் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது அந்த வகையில் மேலும் இவர் பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வசீகரா பிரிவோம் சந்திப்போம், என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகை லிஸ்டில் இருந்த இவர் தன்னுடன் இணைந்து நடித்த பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை சிறிது காலம் கழித்து சில காட்சிகளில் நடித்து வரும் சினேகா ரியாலிட்டி ஷோக்கலில் நடித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் சினேகா அந்த பேட்டியில் தாங்கள் தவறவிட்ட திரைப்படம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பட்டென சந்திரமுகி என்று கூறிவிட்டார் சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கேரக்டரை முதலில் இவர் தான் நடிக்க வேண்டியது அந்த சமயத்தில் மிஸ் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

முத்துன கத்திரிக்கா வீட்ல இருக்கும் பொழுது பிஞ்சு கத்திரிக்காவுக்கு அதுக்குள்ள கல்யாணமா.?

பொதுவாக நடிகைகள் தங்கள் தவறவிட்ட படங்கள் பற்றி எதுவும் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி நடிகை சினேகா சில தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திரமுகி திரைப்படத்தில் தான் சந்திரமுகியாக நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை கூறியுள்ளார் உடனே ரசிகர்கள் பலரும் சந்திரமுகி திரைப்படத்தில் சினேகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் என்னை விட நடிகை ஜோதிகா அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என அவரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version