சினேகா சரியான கோல்மூட்டி..! பேட்டியில் பங்கம் செய்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்த திரைப்படம் என்றால் ஆட்டோகிராப் திரைப்படத்தையும் சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படம் ஆனது மிகவும்  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தினும் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தினை இயக்குனர் சேரன் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் தானே நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் கோபிகா சினேகா ஆகியோர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் நட்பு ஆகிய இரண்டின் ஆழத்தையும் மிக அழகாக சேரன் அவர்கள் திரைப்படத்தின் மூலம் வெளிகாட்டிருப்பார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பை நடிகை சினேகாவால் நான் இழந்தேன் என இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் மேடையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சேரன் அண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் பாண்டிராஜ் அந்த வகையில் பாண்டவர் பூமி திரைப்படத்திலிருந்து அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் சம்பளம் பேட்டா என எதுவும் இல்லாமல் சேரனிடம் வேலை பார்த்து வந்தாலும் அனுபவத்திற்காக மட்டுமே அவரிடம் பணி புரிந்து வந்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஒருமுறை அவர் என்னிடம் டோஸ் விட்ட காரணத்தினால் அந்த கடுப்பை நான் யாரிடம் காட்ட வேண்டியது எனது தெரியாமல் டிரைவர் இடம் கோபத்தை காட்டி விட்டேன் அப்படியே அந்த டிரைவர் சினேகாவிடம் தனியாக ஒரு கதையை ஓட்டி விட்டான் பின்னர் சினேகா சேரனிடம் என்னைப் பற்றி புகார் தெரிவித்துவிட்டார்.

உடனே இயக்குனர் சேரன் அவர்கள் என் தரப்பு நியாயத்தை கொஞ்சம் கூட கேட்காமல் 2௦௦ பேர் சுற்றி நிற்கும் நிலையில் என்னை கண்ணா பின்னான்னு திட்டி விரட்டி விட்டார் மேலும் தன்னுடைய தன்மானம் தலைதூக்கியது ஒரு தம்பியாகவும் நண்பனாகவும் உதவி இயக்குனராகவும் சேரனுடன் இருந்தேன் ஒரு நடிகையால் அந்த உறவு உடைந்து விட்டது.

pandiraj-1
pandiraj-1

மேலும் கோபத்தில் நடந்தே அலுவகத்திற்கு வந்தேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை உடனே தங்கர் பச்சன் சாரிடம் கால் செய்து உதவி இயக்குனர் வேலை இருக்கிறதா என்று கேட்டேன் உடனே வாப்பா எனக்கும் ஆள் தேவை என்று கூறினார் அப்படியே  அழகி படத்தில் அவரிடம் இணைந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Leave a Comment