சினேகா முதன் முதலில் உருகி உருகி காதலித்தது பிரசன்னாவை கிடையாதா.? கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என மிகவும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் சிரிப்பு தமிழ்நாட்டு ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டது அந்த அளவு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில் சினேகா தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2000 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து வந்தார், இவர் நடித்த காலத்தில் பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார், ஒரு காலகட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சிறிது காலம் நடிக்காமல் இருந்த சினேகா மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

சினிமாவில் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் சமீபகாலமாக நடித்து வருகிறார், வேலைக்காரன் திரைப்படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதேபோல் தனுஷின் பட்டாஸ் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நவரசா, வான் ஆகி இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார், நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினேகா முதலில் பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதாக இல்லை அவருக்கு முன்னதாக ஒரு தயாரிப்பாளரைதான் திருமணம் செய்ய இருந்தார், ஆனால் அவரின் நடவடிக்கை எதுவும் சரியில்லாத காரணத்தால் சினேகா அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.

Payilvan-Ranganathan
Payilvan-Ranganathan

அதன் பிறகுதான் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என அந்த பேட்டியில் பயில்வான் கூறியுள்ளார், இதற்கு முன் பயில்வான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் அனுஷ்காவுக்கு திருமணம் என பல பேட்டிகளை கொடுத்தார் ஆனால் அந்த அனைத்து பேட்டிகளையும் பொய்யான தகவல் என்று சம்பந்தப்பட்ட நடிகைகளை கூறினார்கள்.

அந்த வகையில் தற்போது சினேகா பற்றி கூறிய விஷயமும் பொய்யான தாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது, நடிகர் பயல்வானுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைக்காததால் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Comment