குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய சினேகா.! உங்களுக்கு எல்லாம் வயசே ஆகாதா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் நடிகை சினேகா இவரின் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும். அதுமட்டுமில்லாமல் இவர் சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழி விழும் அதுதான் இவருக்கே அழகு. தமிழ் சினிமாவில் முதன் முதலாக என்னவளே என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், நீ ரொம்ப அழகா இருக்க, உன்னை நினைத்து, கிங், புன்னகை தேசம், என பல திரைப்படத்தில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சினேகா முதன்முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இணைந்தார் பின்னர் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினார்கள் அதன்பிறகு 2012ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள்.

தற்பொழுது சினேகா தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் தான் வசித்து வருகிறார் பின்பு 2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு விஹான் என பெயர் வைத்தார்கள்.  அதன்பிறகு சினேகாவிற்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அந்தப் பெண் குழந்தைக்கு ஆத்யந்த என பெயர் வைத்திருந்தார்கள்.

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சினேகா பல விளம்பர திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் வீட்டில் ஏதாவது சுபநிகழ்ச்சி நடந்தாலும் அதனை அங்கீகரித்து தெரிவிக்கும் வகையில் அடிக்கடி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவார்.

sneha
sneha

இந்த நிலையில் பொங்கல் தினத்தை கோலாகலமாக சினேகா மற்றும் அவரது குடும்பத்தாருடன் கொண்டாடினார் அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சினேகா மற்றும் பிரசன்னா அவர்களின் இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளன.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

sneha
sneha

Leave a Comment