சிவகார்த்திகேயன் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் 20வது திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் மிக வேகமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைய இருக்கிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில்  உருவாகிவரும் சிவகார்த்திகேயனின் 20-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் 20வது திரை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராசி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் உட்பட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்  தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்துள்ள டான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

எனவே சிவகார்த்திகேயனின் திரைப்படம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

Leave a Comment