மற்ற நடிகர்களை விட ரசிகர்களின் நலனுக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்.!

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு ஒரு முடிவே இல்லையா என மக்கள் கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு ஊரடங்கு புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இதனால் மக்கள் பலரும் தங்களது தினசரி வேலையை செய்வதற்கு கூட அனுமதி இல்லை.

மிகவும் ஏழை எளிய மக்கள் தங்களது தினசரி வேலை செய்தால் தான் ஒரு வேளை சாப்பாடு என்ற அளவிற்கு இருக்கிறார்கள் இவர்களை கஷ்டப் படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை போட்டதும் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்கள் அவ்வாறு இன்னும் நிறைய பிரபலங்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு ஒரு தகவலை பகிர்ந்து உள்ளாராம் அதாவது சிவகார்த்திகேயன் தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் முக்கியமான வேலையா இருந்தா கூட இரண்டு முக கவசம் அணிந்துகொண்டு வெளியே போங்கள் யாரையும் தொடாதீர்கள்.

நீங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பீங்க என நான் நம்புகிறேன் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தி வரும் நேரத்தில் யாரும் தயவு செய்து வெளியே வந்து விடாதீர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் கொரோனா என்கிற பிரச்சனை கூடிய சீக்கிரம் முடிந்துவிடும்.

sivakarthikeyan2
sivakarthikeyan2

அனைவரும் பழைய இயல்பான நிலைக்கு திரும்பலாம் கொஞ்சம் காத்திருங்கள் என சிவகார்த்திகேயன் கூறியதாக இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளாராம்.

Leave a Comment