மாவீரன் படத்திற்காக பிளான் போட்டு ஹாலிவுட் ஸ்டென் மாஸ்டர்களை களமிறக்கிய சிவகார்த்திகேயன்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. வெளியான அதிரடி தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சினிமாவில் குறுகிய ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு விஜய் டிவியில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதல் முதலில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வெற்றி படமாக அமையும் நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக தன்னுடைய படத்தில் பெரிய அளவிற்கு கேர் எடுத்துக் கொள்ளாத சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்திற்காக மிகவும் மெனக்கட்டு வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சண்டை காட்சிக்காக வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களை களம் இறக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதாவது இந்த படத்தில் அமைந்த இறுதி சண்டை காட்சிக்காக வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்கலை பயன்படுத்தி நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version