சிவகார்த்திகேயனுக்கு எழுதிய கதையில் விஜய்யா.?

விஜய் தற்போது 64 ஆவது படமாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். திரைக்கு வர இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு ஏற்று நிற்கிறது.

இதனை அடுத்து  இளையதளபதி விஜயின் 65ஆவது படம் எந்த இயக்குனர் எடுக்க போகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் ஒருசில நாட்களுக்கு முன்பே கேள்வி எழுப்பிக் வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யிடம் கதை கூறியபோது கதை பிடிக்கவில்லை என்று சொல்லி அவரை தட்டிக்கழித்தர்.

இந்நிலையில் விஜயின் 65 வது படமாக நெல்சன் தான் இயக்கப் போகிறார்கள் என்று சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கூறி வந்திருந்தார்கள்.

இதனையடுத்து இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்.

அந்தவகையில் சிவகார்த்திகேயனுக்காக இன்னொரு கதையும் நெல்சன் எழுதி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்காக எழுதிய கதையை விஜய்யிடம் கூறியபோது விஜய் ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் கூடிய சீக்கிரம் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment