தனது மனைவியுடன் மிகவும் நெருக்கமாக தோளில் கை போட்டுக்கொண்டு செல்பி புகைப்படத்தை எடுத்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா உலகில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் முதலில் டாக்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவராக டான் என்ற திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்பு துணை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதனை அடுத்து தான் கதாநாயகனாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய பொழுது அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் நடித்தபடங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியால் அடுத்தடுத்து திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இதைதொடர்ந்து சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும்பொழுது செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment