இவருடைய சாயல் எனக்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி.! விஜய் சாயல் இருக்கிறதா என்பது தெரியவில்லை.. மாவீரன் அப்டேட் கூறிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பணியை தொடங்கிய இவர் தற்பொழுது மும்பரமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது.

மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்த இவர் இந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார். பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவருக்கு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் ரஜினியின் குரலில் பேசி பல மேடைகளில் அசத்தியிருந்தார்.

அப்படி ஒரு முறை விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன் ரஜினியின் அருகில் நின்று கொண்டு அவரைப் போல் பேசி மெய்சிலிர்க்க வைத்தார். எனவே சிவகார்த்திகேயன் ரஜினியை போல் இருக்கிறார் என பலரும் கூறி வந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய் மற்றும் ரஜினி இரண்டு பேரின் சாயினும் சிவகார்த்திகேயன் எனக்கு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயன் கேள்வி கேட்க அதற்கு சிவகார்த்திகேயன், நான் ரொம்ப ஈர்க்கப்பட்ட மனிதர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் பல ஆயிரக்கணக்கான மேடையில் அவரை போல பேசி பல புகழை வாங்கியுள்ளேன் இதன் காரணமாக கூட நான் நடிக்கும் சில காட்சிகளில் உங்களால் ரஜினி சார் சாயலை பார்க்க முடிகிறது.

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள் உண்டு ஆனால் எனது நடிப்பில் ரஜினிகாந்த் சாயலை நானே உணர்ந்து இருக்கிறேன் என வெளிப்படையாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் நிலையில் விஜய் போன்ற சாயலில் நான் நடித்திருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை என்றும் பார்ப்பவர்களுக்கு அப்படி என்றால் அது அவர்களுடைய கருத்து எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் நேற்று தான் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது எனவும் விரைவில் கமலஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment