புன்னகை சிரிப்புடன் சாய்பல்லவிக்கு விருது வழங்கும் சிவகார்த்திகேயன்.! வேற லெவல் புகைப்படம்.!

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் தொகுப்பாளராக இருந்து பின்பு காமெடி நடிகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ச்சியாக தற்போது பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் இவர் தற்பொழுது மடோ அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தவிர்த்துப் பார்த்தால் ராஜ்கமல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 21 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது சமீபத்தில் தான் நமக்கு தெரியும்.

பொதுவாகவே சாய் பல்லவி மிகவும் க்யூட்டாக நடிக்கும் நடிகை இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் சீரும் சிறப்புமாக நடிக்கும் குணமுடையவர்.அதே போல் சாய் பல்லவி இந்த திரைப்படத்திலும் நடிக்க களமிறங்கியுள்ளார் மேலும் தற்பொழுது சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் அவர்கள் விருது வழங்கியுள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருது விழா நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் விருது வழங்கியுள்ள புகைப்படம் ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவங்கள் இருவருமே இந்த திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடிப்பார்கள் எப்பொழுதுதான் படத்தின் அடுத்தபடியான அப்டேட்கள் வெளிவரும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment