அசுர வளர்ச்சியில் சிவகார்த்திகேயன்… ரஜினியின் பிரமாண்ட பட தயாரிப்பாளருடன் அடுத்த கூட்டணி.! மிரளும் கோலிவுட்

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நல்ல என்டர்டைன்மென்ட் மூவிகளைக் கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு பிடித்தது போல் படங்களில் நடித்து குழந்தைகளை வெகுவாக கவர்ந்து விட்டார்.  சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் வெற்றித் திரைப்படங்களை கொடுத்தாலும் இடையில் மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் அதன் பிறகு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

இந்த நிலையில் பல முன்னணி இயக்குனர்கள் சிவகார்த்திகேயனுடன் படம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் அடுத்ததாக சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வர இருக்கிறது அதனை தொடர்ந்து அயர்லான் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் 2.0, தர்பார் திரைப்படங்களை தயாரித்த லைகா நிறுவனம் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்கள் எனக்கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை அட்லியின் உதவி இயக்குனர் தான் இயக்கப்போகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.  எது எப்படியோ ஒன்னு முருகதாஸ் திரைப்படம் அல்லது அட்லீயின் உதவி இயக்குனர் திரைப்படம் அடுத்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு.  அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் அந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஏழு வருடத்தில் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்குமே ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment