ஹீரோ திரைப்படத்தால் வெறுத்துப் போன சிவகார்த்திகேயன்.! யாரிடம் தஞ்சம் அடைந்துள்ளார் பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர் இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன் இவர் தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெற்று வந்தது.

அதேபோல் ஒரு சில தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார், ஒரு சில தோல்வி படத்தை கொடுத்தாலும் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஹீரோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது, குறிப்பாக திருட்டு கதை விவகாரத்தில் சிக்கியது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு பெரும் தலைவலி பிரச்சனையாக இருந்தது, ஆனால் இதற்கு முன் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதனால் மீண்டும் தற்போது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் 3வது முறையாக இணைய இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன, இதனால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரிடமே சிவகார்த்திகேயன் தஞ்சம் அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version