தனது மகனுக்கு தந்தை பெயர் வைத்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் அவரின் மகன் புகைப்படம் .!

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்பு தமிழ் திரையுலகில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தை ஏற்று தற்போது கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார் பின்பு காமெடி நடிகனாக வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து தற்போது கதாநாயகனாக நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

மேலும் காமெடி நடிகராக அறிமுகமான இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹிட் கொடுத்ததால் கதாநாயகனாகவே தற்பொழுது நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் இவர் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவரது நடிப்பில் அயலான் மற்றும் டான் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இவர் நடித்த டாக்டர் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்பது பற்றி ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆராதனா என்ற பெண்குழந்தை இந்த நிலையில் கடந்த ஜூலை 2ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதாவது இவரது குழந்தைக்கு தனது தந்தை பெயரை சூட்டியுள்ளாராம்.

ஆம் இது குறித்து அவர் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டி இருக்கிறோம் என்று கூறி ஒரு பதிவை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவரது குழைந்தைக்கு குகன் தாஸ் என பெயர் வைத்துள்ளதால் ரசிகர்கள் பலரும் இவரைப் பாராட்டி வருகிறார்கள் ஏனென்றால் இவரது தந்தை பெயரையே தனது மகனுக்கு இவர் வைத்து விட்டார் என கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment