மிலிட்டரி அதிகாரியாக நடிக்கப் போகும் சிவகார்த்திகேயன்.? அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி விட்டார் இவர் தற்பொழுது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஆம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷன் நிறுவனம் மூலம் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் எஸ்கே 21 திரைப்படத்தில் கூடிய விரைவில் நடிக்க போவதாக தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க இருக்கிறார்களாம் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு இன்னும் வெளியிடவில்லை விரைவில் இதற்கான அப்டேட் வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆஃபீஸராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இதற்காக அவர் சிறப்பு பயிற்சி மும்பையில் அளிக்கப்பட்டு வருகிறதாம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் காஷ்மீரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தாலும் இடையில் ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சிவகார்த்திகேயன் தனது திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் கதைகளை பற்றி நன்கு கேட்டுக் கொண்டுதான் நடிப்பாராம்.அதேபோல இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஒரு சில திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment