நான் நடுவராக இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட்..! ஆனால் இப்போ மனம் உருகிய நடிகர் ஷாம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஷாம் இவர் ஒரு நேரத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் என்று கூறலாம்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 12 b மற்றும் உள்ளம் கேட்குமே போன்ற பல்வேறு திரைப்படங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.

நமது நடிகர் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார் அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அவர் பேசிய விஷயங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று மிக வைரலாக பரவி வருகிறது.

அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு பின் ஒரு மிகப்பெரிய கேங்க் சினிமாவில் என்ட்ரி ஆனது ஆனால் அவர்கள் அனைவருமே புரோடக்சன் குழுவுடன்  உள் நுழைந்தார்கள் என்பது தெரியவந்தது.

ஆனால் எங்களுக்கு அந்த மாதிரியான எந்த ஒரு துணையும் இல்லாமல் தான் சினிமாவில் உள் நுழைந்தோம். அந்த வகையில் சினிமாவில் பயணம் செய்ய வேண்டுமென்றால் தனியாக போராடி  மேலே வருவதற்கு படாத கஷ்டங்களை பட்டு தீர வேண்டும் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனையும் கூட உதாரணமாக சொல்லலாம்.

ஏனெனில் சிவகார்த்திகேயன்  பல்வேறு கஷ்டங்களை  பட்டது மட்டுமில்லாமல் மிக கடுமையாக உழைத்து அதன் பின்னர் தான் திரைஉலகில் முகம் காட்ட ஆரம்பித்தார்.  ஆனால் vj வாக இருந்தவர் தற்போது நடிகராக மாறிவிட்டார் என்று சாதரணமாக அவரை கூறுகிறார்கள்.

sham-1
sham-1

ஒரு நேரத்தில் பாய்ஸ் வாஸ் கேர்ள்ஸ்  என்ற நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்தேன் அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார் அப்பொழுது அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்து போய் விட்டேன் அந்த நிலையில் அவரிடம் நீ முயற்சி செய் பெரிய உயரத்திற்கு செல்வாய் என்று கூறினேன்.

ஆனால் அவர் சொல்வதை மிக சிம்பிளிசிட்டி அதை எடுத்துக்கொண்டு தற்போது கூட என்னை பார்த்தால் அவர் சார் நீங்கள் அன்னைக்கு சொன்னதை நான் சரியாக செய்துள்ளேன் என்று தன்னடக்கத்துடன் பேசுவார் என நாம் சந்தோஷமாக கூறியுள்ளார்.

Leave a Comment