பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை கொடுத்த சிவகார்த்திகேயன்.!

Sivakarthikeyan : மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற பகுதிகளில் தண்ணீர் உள்ளே புகுந்து வீடு நாசமாகியது அதுமட்டுமல்லாமல் கரண்ட் எதுவும் இல்லாமல் மக்கள் ரொம்ப அவதிப்பட்டு வந்த நிலையில் அரசு முன்னேற்பாடு செய்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல் உணவு,  பால் பாக்கெட் போன்றவற்றை கொடுத்தது.

மறுபக்கம் சமூக ஆர்வலர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தானாக முன்வந்து உதவி  செய்தனர் அப்படி கே பி ஒய் பாலா 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் கலா மாஸ்டர் பால் பாக்கெட் வழங்கினார் நடிகர் ஆதி நிக்கி கல்ராணி போன்றவர்கள் மக்களுக்கு சாப்பாடுகளை வழங்கினார்.

காக்கா – கழுகு சண்டை போடும் ரஜினி – விஜய்.. களத்தில் இறங்கி உதவி செய்த பாலா.. உண்மையான சூப்பர் ஸ்டார் யார்.?

அஜித் மறைமுகமாக தன்னுடைய நண்பர்கள் மூலம் உதவி செய்தார் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் சாப்பாடு மற்றும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்  இதேபோல நடிகர் கார்த்தி, சூர்யா போன்றவர்கள் தன்னுடைய ரசிகர்கள் மூலம் உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் வெள்ள நிவாரணத்திற்கு தன்னால் முடிந்த காசோலைகளை வழங்கினர்.

இப்படி உதவிகள் செய்தாலும் வீடுகள் நாசமாகி உள்ளது ரோடு போன்றவை சரியாக இல்லாமல் இருப்பதால் மக்கள் இன்னும் அவதியில் தான் இருக்கின்றனர். மக்கள் இதிலிருந்து மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

2023 – ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்கள்.. தயாரிப்பாளரின் பேச்சால் வசமாக மாட்டிக் கொண்ட விஜய் படம்

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதயநிதி தன்னுடைய ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version