இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திற்காக வெறும் 10000 மட்டும் தான் வாங்கியுள்ளார் தெரியுமா.! வைரலாகும் தகவல்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் மிகக் குறைவான சம்பளத்திற்கு நடித்துள்ளார்கள் அந்த தகவல் ரசிகர்களிடையே தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட இந்த முன்னனி நடிகர் முதல் திரைப்படத்திற்காக இவ்வளவுதான் வாங்கினாரா என ஆச்சரியப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் முன்னணி நட்சத்திரகரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்பொழுது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய  பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் இனி வெளியாக இருக்கும் திரைப்படமாக மாவீரன், அயலான்   திரைப்படங்கள் இருக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயன் குடும்பப்பாங்கான திரைப்படத்தை எடுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது இந்த நிலையில் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் திரைப்படம் கோடிகளில் வசூல் செய்து வருகிறது.

தற்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார் இந்த நிலையில் முதல் திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய முதல் திரைப்படத்திற்காக வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம் இதனை அவரே பேட்டி ஒன்றில் மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இன்று கோடி கோடியாக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் முதல் திரைப்படத்தில் வெறும் பத்தாயிரம் தான் வாங்கினாரா என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

Leave a Comment