நெல்சனின் வற்புறுத்தலால் தான் சினிமாவிற்கு வந்தேன் என உண்மையை உடைத்த டாக்டர் பட நடிகர்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்த ஏராளமான முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். பொதுவாக சமீப காலங்களாக நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல இயக்குனர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அது அந்த இயக்குனரையே சேரும் அந்த வகையில் சமீப காலங்களாக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் இயக்குனர் நெல்சன்.இவர் இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன்,பிரியங்கா அருள், மோகன் யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்த திரைப்படம் தான் டாக்டர்.

இத்திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி.இந்த திரைப்படத்தில் இவருடைய முக பாவனைகள்,பேச்சு, பாடி லாங்குவேஜ் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு இவர் தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் நெல்சன் திலிப் குமார் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார்.

redin
redin

தற்பொழுது மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி சமீப பேட்டி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலிப் குமாரை பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது டீசரில் உங்கள் முகம் காட்டப்படவில்லை என்ற செய்தி வெளியானது.

நெல்சன் மற்றும் உங்களின் நண்பர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் இருப்பதாகவும், உங்களுக்கும் நெல்சனுக்கும் ஏதோ பிரச்சனை என்றும் கூறப்பட்டு வருகிறது இது கூறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.’நெல்சன் வேண்டும் என்று பயன்படுத்தாமல் இல்லை என்று கூறினார். மேலும் சினிமாவில் வற்புறுத்தி தான் வந்தேன் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்’ ரெடின் கிங்ஸ்லி.

Leave a Comment