தனது பையனுக்கும் தனக்கும் மெட்சிங் வெட்டி சட்டையைப் போட்டுக்கொண்டு மனைவியுடன் பொங்கலை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.!இணையதளத்தில் வைரலாக புகைப்படம்.

தமிழ்நாடு முழுவதும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் கிராமப்புறங்களில் தை பொங்கல் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்துவீட்டில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவார்கள். அதேபோல் சிட்டியில் இருக்கும் மக்கள் பலரும் சமையலறையில் பொங்கல் வைத்து கடவுளை வணங்குவார்கள்.

தற்பொழுது கொரனோ வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது அதனால் மக்கள் தங்களுடைய குடும்பத்துடன் வீடுகளிலேயே பொங்கலை எளிமையாக கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் பொங்கலை விமர்சையாக வீட்டில் கொண்டாடிய புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் ஷிவானி நாராயணன் தர்ஷா குப்தா கேப்ரில்லா சாக்ஷி அகர்வால் யாஷிகா ஆனந்த் என பலரும் பொங்கலை கொண்டாடி அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறார்கள் அப்படிதான் சூர்யா ஜோதிகா இருவரும் பொங்கலை கொண்டாடி அதன் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி மகள் ஆராதனா மகன் குகன் ஆகியோருடன் இணைந்து இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து வேஷ்டி சட்டையில் கலக்கலாக பொங்கல் வைத்துள்ளார்.

அதைப்போல் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா நீல நிற உடையில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி எப்பொழுதும் போல் மிகவும் சிம்பிளாக பட்டுப்புடவையில் இருக்கிறார்  அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக் கூறி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு தனது மகள் ஆராதனா குழந்தையாக இருக்கும் பொழுது அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் பொங்கல் வைத்துள்ளார் அந்தப் புகைப் படமும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment