ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்.! மேடையிலேயே ஓப்பனாக கூறிய பிரபலம்.! அப்போ அஜித்…?

தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து புதுமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் லாபம் பார்த்தது.

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் போஸ்டர் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா அவர்கள் நடித்து முடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சூரி அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம்  வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி ஒரு சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சினிமா பிரபலம் அன்புச்செழியன் அவர்கள் தற்போது ஒரு பேட்டி ஒன்று அளித்துள்ளார் அதில் கூறியதாவது தமிழக முழுவதும் 650 திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் வெளியாகிறது என்றும் சிவகார்த்திகேயன் படம் என்றாலே அது ஹிட் தான் என்றும் கூறியுள்ளார் அதேபோல் இந்த பிரின்ஸ் படம் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் சினிமா உலகில் ஒரு சில நடிகர்களை எல்லோருக்குமே பிடிக்கும் அந்த வரிசையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய், அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று கூறியுள்ளார்.

Leave a Comment