என் நண்பன் சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும் பிடிவாதம் பிடித்த தனுஷ்.! உண்மையை உடைத்த இயக்குனர்

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர்  சிவகார்த்திகேயன் ஆவார். இவர் முதலில் விஜய் டிவியில்  ஒளிபரப்பான காமெடி ஷோ மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இவரை திரை உலகிற்க்கு  அறிமுகம் செய்தவர் நடிகர் தனுஷ் ஆவார்.

இதனைத் தொடர்ந்து 3 , மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், சீமராஜா,  மிஸ்டர் லோக்கல் இன்னும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் எதிர்நீச்சல் படத்தின் மூலம் தான் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமானார். பின்பு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் கடந்த வருடம் திரை உலகிற்கு வந்த கானா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இவர் படிப்படியாக உயர்ந்து தற்போது தனக்கென ஒரு இடத்தை  பிடித்துள்ளார் .இவருக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது  என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் முக்கியமாக பெண்களுக்கு தான் இவரை  மிகவும் பிடிக்கும்.

தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த படம் எதிர்நீச்சல் இதனை செந்தில்குமார் அவர்கள்  இயக்கினார். தனுஷிடம் எதிர்நீச்சல் கதையை சொல்லுமாறு துரைசெந்தில்குமாரிடம் பரிந்துரை செய்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் துரை செந்தில்குமார் அவர்கள் தனுஷிடம் கதையை சொன்னதும் தனுஷுக்கு பிடித்துவிட்டது இந்தக் கதையை சிவகார்த்தி இடம் கூறுமாறு துரைசந்தில்குமார்  கேட்டுள்ளார். தனுஷ் அவர்களும் சிவகார்த்திகேயனிடம் கூற இவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து துரை செந்தில்குமாரிடம் தனுஷ்  அவர்கள் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும், அனிருத் அவர்கள் இசை அமைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு கதாநாயகிகள் இடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் அதில் பிரியா ஆனந்த் அவர்கள் நடிக்க ஒப்பந்தம்  ஆனார்.

Leave a Comment