கோடிக்கணக்கில் மோசடி செய்த பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி.! கதறி அழும் பொதுமக்கள்..

ராபர்ட் மாஸ்டர் சகோதரியை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்திருக்கும் சம்பவம் குறித்து தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் அல்போன்சா. இவருடைய தம்பி தான் ராபர்ட் மாஸ்டர் மேலும் சோபா வசந்த் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளார்.

இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார் அதில் பல வருடங்களாக பிளாஷ் கன்சல்டேஷன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனவே இந்த நிறுவனத்தை பிரபலமடை செய்ய வேண்டும் என்பதற்காக பல கவர்ச்சியான புகைப்படங்களை கூட வெளியிட்டு வந்தார் இந்நிறுவனத்தின் மூலம் பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்திருக்கும் நிலையில் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலரும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு சோபாவிடம் நேரடியாக போனின் மூலம் விசாரித்து உள்ளனர்.

அப்படி சோபா தன்னை அனுப்புபவர்கள் அனைவரையும் தன்னுடைய பேச்சியினால் மயக்கி துளி கூட சந்தேகம் இல்லாதது போல் நடந்து கொண்டு அவர்களுடைய மனதில் ஆசையை வளர்த்து பிறகு அவர்களும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கில் பணத்தை சோபாவிடம் கொடுத்து உள்ளார்கள். இவ்வாறு பணத்தை வாங்கிக் கொண்டு பிறகு தன்னுடைய வேலையை காமிக்க ஆரம்பித்துள்ளார் ஷோபா.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் நேராக வளசரவாக்கத்தில் இருக்கும் அவருடைய ஆபீசுக்கு சென்று ஷோபாவிடம் பேச அதற்கு ஆறு மாதத்தில் வேலை கிடைத்த விடும் என கூறியிருக்கிறார். ஆனால் வேலையும் கிடைக்கவில்லை, வாங்கிய பணத்தையும் சோபா திரும்பி தராத நிலையில் இதனால் நாளுக்கு நாள் தொந்தரவு செய்ய ஒரு கட்டத்தில் ஷோபா வளசரவாக்கம் ஆபீசை மூடிவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளார்.

shopa
shopa

எனவே இதன் காரணமாக சோபா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். போலீஸ்காரர்களும் சோபாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் இறுதியாக நொளம்பூர் பகுதியில் அவருடைய ஆபீஸில் சுற்றி வளைத்தனர். அவரிடம் கேட்டதற்கு கடந்த வருடம் மார்ச் மாதம் எல்லோருக்கும் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் எனவும் கூறியதால் மக்களும் நம்பி சென்றுள்ளார்கள் இவ்வாறு ஒரு கட்டத்திற்குப் பிறகு செல்போன் மூலம் எல்லா தடைகளையும் சோபா மறைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

எனவே சென்னை மத்திய குற்ற பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் சோபா மீது புகார் தந்துள்ளனர் தற்பொழுது கொலம்பாக்கத்தில் ஒரு லாட்ஜியில் ஷோபா தங்கி இருக்கிறார். அங்கு போலீசார்கள் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் எனவே இந்த தகவலை தெரிந்துக் கொண்ட பொதுமக்கள் கமிஷனர் ஆபீஸ் இருக்கு வந்து கதறி அழுது உள்ளார்கள்.

Leave a Comment