அக்கா 8 அடி பாஞ்சா தங்கை 16 அடி பாய்கிறாரே…! ரஜினியை வைத்து 500 கோடி வியாபாரத்தை முடித்த இளைய மகள் சௌந்தர்யா…?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் தான் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர் நிறுவனத்தில் நடிப்பதற்கு கால் சீட் கொடுத்து தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை முடித்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லைக்கா நிறுவனத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதேபோல் இந்த திரைப்படத்திற்கு முன்பு லைக்கா நிறுவனம் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக நடிக்கும் புதிய திரைப்படமான லால் சலாம் என்ற திரைப்படத்தை  தயாரித்து வருகிறார்கள்.

அதே போல் ஐஸ்வர்யா திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயக்கம் காட்டிய லைகா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டீல் பேசியதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் தயக்காட்டியதாகும் பின்பு ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சொன்ன பிறகு லைகா நிறுவனம் ஒப்பு கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் தொழில் ரீதியாக மிகப்பெரிய போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தன்னுடைய தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மூத்த மகள் ஒரு காரியத்தை சாதித்தால் இளைய மகள் சௌந்தர்யாவும் ஒரு காரியத்தை சாதிக்காமல் விடமாட்டார் இப்படி இருவருக்கும் கடும் போட்டி இருக்கும் வகையில் ரஜினிகாந்தை வைத்து சௌந்தர்யா அனிமேஷன் படம் எடுத்ததால் அடுத்ததாக தன்னுடைய கணவரின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க வைத்தார் ஐஸ்வர்யா. மூத்த மகள் இயக்குனராக படம் எடுத்தால் இளைய மகளும் இயக்குனராக ஒரு படம் எடுப்பார் இப்படி இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி மூத்த மகள் சௌந்தர்யா ஒரு படம் இயக்க இருக்கையில் இளைய மகள் அவருடைய கணவருக்கு சொந்தமான ஒரு மருத்துவ கம்பெனிகளில் இருந்து சுமார் 500 கோடி ரூபாய்க்கு மருந்து கொள்முதல் செய்வதற்காக தொழில் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தை லைக்கா நிறுவனத்துடன் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் லைக்கா தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினியை வைத்து சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது அந்த கதையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதால் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் லைக்கா நிறுவனம் கதை கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த கதையை ரஜினிகாந்த் ஓகே செய்துவிட்டால் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தான் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment