பிரம்மாண்டமாக தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொண்டாட்டத்தில் சிறுத்தை சிவா.! எங்கு தொடங்கியது தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து அண்ணாத்த நடித்து வந்த நிலையில் நான்கு பேருக்கு கொரோனா என்பதால்  படக்குழு படத்தை தற்காலிகமாக நிறுத்தியது.

இதனையடுத்து அந்த திரைப்படத்தில் நடித்த முன்னணி பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், நயன்தாரா போன்றோர் உடனடியாக ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக ரஜினிக்கு கொரோனா தோற்று இல்லை என்றாலும் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு செல்லப்பட்டு பின் சென்னைக்கு வீடு திரும்பினார்.

அதனால் படக்குழுவும் சரியான முடிவு எடுக்க முடியாமல் போனதை அடுத்து பல மாதங்கள் கிடப்பில் கிடந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாத்த படக்குழு திடீரென இன்று தனது படபிடிப்பை தொடங்கியது.

siruthai-siva

இன்று முதல் 30 நாளைக்கு படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்படும் என தெரியவருகிறது படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகே வடமாநிலங்களில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

படத்தை மிக தீவிரமாக எடுக்க இயக்குனர் முனைப்பு காட்டி வருகிறார் அதற்கு காரணம் படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது இதனையடுத்து சிறுத்தை சிவா தனது வேகத்தை கூட்டி உள்ளதாக தெரியவருகிறது.

Leave a Comment

Exit mobile version