மகன்கள் அடித்துக் கொண்டதை பார்த்து கண்ணீர் விட்ட அண்ணாமலை.. ஹனிமூனுக்கு போகும் மனோஜ் – ரோகினி.

சிறகடிக்க ஆசை சீரியல் : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து மனோஜிடம் மீண்டும் கோவப்பட்டு இரண்டு பேரும் சண்டை போடுகின்றனர் இதை பார்த்து அண்ணாமலை நீங்க மூணு பேரும் அண்ணன் தம்பி ஒற்றுமையாய் இருப்பீங்கன்னு பாத்தா இப்படி அடிச்சுக்கிறீங்களே.. நாளைக்கு உங்க முன்னாடி உங்க பசங்க வளர்ந்து இப்படி அடிச்சிக்கும் போது தான் என் கஷ்டம் உங்களுக்கு தெரியும் என்று மன வருத்தமாக பேசுகிறார்.

அடுத்து ரோகினி பியூட்டி பார்லருக்கு மனோஜ் உடைய பழைய மேடம் வராங்க அவங்க ரோகினி கிட்ட என்னால ஒங்க கல்யாணத்துக்கு வர முடியல அப்ப அந்தமான்ல இருந்தேன் மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது மனோஜ் எப்படி இருக்காரு என நலம் விசாரிக்கின்றனர். பின்பு புதுசா கல்யாணம் ஆனவங்க ஹனிமூன் எங்கேயும் போகலையா என்று கேட்பதற்கு..

ரோகிணி அதெல்லாம் இல்ல இங்கயே நிறைய வேலை இருக்கு என சொல்வதும் நான் வேணும்னா உங்களுக்கு அந்தமான்ல ஹனிமூன்க்கு ஏற்பாடு பண்றேன் போற செலவு மட்டும் நீங்க பார்த்துக்கோங்க என்று சொல்வதும் சரி மனோஜ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் என ரோகிணி சொல்கிறார். இதனை எல்லாம் ரூமுக்கு வெளியே நின்று மனோஜ் கேட்டு கொண்டிருக்கிறார்.

பிறகு அந்த மேடம் சென்ற பிறகு ரோகிணியின் தோழியும் மனோஜ் எல்லாம் உன்ன ஒரு நாளும் ஹனிமூன் கூப்பிட்டு போக மாட்டாரு இந்த வாய்ப்ப பயன்படுத்திக்கிட்டு நீயா போயிட்டு வா என சொல்கிறார். பிறகு மனோஜும் ரோகிணி கிட்ட அந்த மேடம் கிட்ட அந்தமான் வரோன்னு சொல்லு நம்ம போயிட்டு வரலாம் என சொல்கிறார். அடுத்து வீட்டில் சீதா பூ எடுத்துட்டு வந்து மீனா கிட்ட கொடுக்கிறாள் அப்போது சீதா மீனாவிடம் மனோஜ் கையில ஏன் கட்டு போட்டு இருக்காரு என்று கேட்க..

உங்க மாமா தான் நேத்து அடிச்சு கையை முறிச்சிட்டாரு, அண்ணாமலை மாமாவ பத்தி தப்பா பேசினாரு அதனால தான் அடிச்சாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதனை கிச்சனிலிருந்து விஜயாவும் கேட்டுவிட்டு பிறகு மீனாவிடம் இங்கு நடந்த விஷயம் எல்லாத்தையும் உங்க அம்மா கிட்ட சொல்ல சொல்லி சீதா கிட்ட சொல்லி அனுப்பிட்டியா என கேக்க நாங்க சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம் என மீனா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Leave a Comment