வெற்றிகரமாக முடிந்த ரவி, ஸ்ருதி கல்யாணம்.. தர்ம அடி வாங்கிய சீதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode October 18 : இன்றைய எபிசோடில் ரவி தன் கல்யாணத்திற்கு மீனாவிடம் பொய் சொல்லி அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார்.. இதைப் போல் ஸ்ருதியும் விச்சுவை அழைத்துக் கொண்டு பிரண்டோட கல்யாணம் என்று சொல்லிவிட்டு  கோவிலுக்கு வந்துள்ளனர்.

அப்பொழுது ஸ்ருதி வச்சுவிடம் கிளம்புற அவசரத்துல கிப்ட் எதுவும் வாங்க மறந்துட்டேன் என்று சொல்ல விச்சு சரி வா நம்ம போய் கிப்ட் வாங்கிட்டு வரலாம் என்று சொல்கிறார் ஆனால் ஸ்ருதி நீங்க தான் சூப்பரா கிப்ட் வாங்குவீங்களே நீங்களே போய் வாங்கிட்டு வாங்க என் பிரண்டு கூட நான் இருக்கேன் என்று சொல்ல விச்சு கிப்ட் வாங்க கிளம்பி விட்டார்.

என்னை யாரும் லவ் பண்ணல.. என் உடல தான் லவ் பண்ணி அனுபவிச்சாங்க.! குமுறும் ஷைனிங் நடிகை.!

பிறகு ஸ்ருதி சீதாவிடம் மாலையை வாங்கிக்கொண்டு கோவிலுக்குள்  போகின்றனர்.. அங்கு ஸ்ருதியோட பிரண்ட்ஸும் சிலர் வந்து இருக்கின்றனர் அவர்களிடம் மாலையை கொடுத்துவிட்டு புடவை மாத்த சீதாவை அழைத்துக் கொண்டு போகிறார்.. பிறகு ரவியும் மீனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்பொழுது ரவி மீனாவிடம் நான் ஸ்ருதி கிட்ட முதலில் பேசிட்டு அப்புறம் வந்து உங்களை கூட்டிட்டு போறேன் நீங்க வெளியவே வெயிட் பண்ணுங்க அண்ணி என்று சொல்லிவிட்டு ரவி உள்ள போய் வேஷ்டி சட்டை மாற்றிக்கொண்டு ஸ்ருதியை பார்க்கிறார்.

பாசமலர் சிவாஜியையே மிஞ்சிட்டாரே.. தமிழின் தியாகம் ராகினி உயிரை காப்பாற்றுமா – தமிழும் சரஸ்வதியும்

பிறகு இருவரும் மாலை மாற்றி ரவி ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டி விட்டார்.. மீனா என்ன இன்னும் ரவியும் ஸ்ருதியும் காணும் உள்ள போய் பார்க்கலாம் என்று உள்ளே வரும்போது இருவரும் மாலையும் கழுத்துமாய் ஸ்ருதி தாலியுடன் நிற்பதை பார்த்து ஷாக் ஆகிய மீனா என்ன ரவி இதெல்லாம் என்ன பொய் சொல்லி கூட்டிட்டு வந்து வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்காங்களே..

மாமா உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்? இது தெரிஞ்சா அவர் உடைந்து போய்விடுவாரு நீங்க எல்லாம் படிச்சவங்க தானே அறிவே இல்லையா என ரவி ஸ்ருதியை திட்டிவிட்டு பிறகு சீதாவையும் இதுக்கு தான் நீ அம்மாவை ஊருக்கு போக சொன்னியா உனக்கு எங்கிருந்து இந்த திருட்டு புத்தி வந்தது.

என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லலையே என சீதாவையும் மீனா திட்டுகிறார்.. பிறகு சுருதி எனக்கு வேற வழி தெரியல என்னோட சூழ்நிலை அப்படி புரிஞ்சுக்கோங்க என்று மீனாவிடம் சொல்கிறார் ஆனால் மீனா இது வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ என பயதில் நிற்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.