உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை ரவியை திட்டி அனுப்பிய குடும்பத்தினர்.! யாரும் இல்லாத நேரத்தில் மீனா பார்த்த வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 2 : இன்றைய எபிசோடில் முத்து காரை விற்று கிடைத்த 4 லட்சம் பணத்தை எடுத்துட்டு வந்து அப்பா ஆப்ரேஷனுக்கு பணம் கட்டியிருக்கிறார். மீதி செலவிற்கு விஜயா தோடு, செயின் எல்லாம் கழட்டி முத்து விடம் கொடுத்து அடமானம் வைத்து வர சொல்கிறார்.

அந்த நேரத்தில் ரவி ஹாஸ்பிடலுக்கு வந்து அப்பாவுக்கு என்ன ஆச்சு நான் அப்பாவ பார்க்கணும் என்று கேட்க உன்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு நீ பார்க்க முடியாது என எல்லோரும் சண்டை போடுகின்றனர்.. பிறகு ரவி அப்பா ட்ரீட்மென்ட்டுக்கு பணம் எடுத்துட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல முத்து பணம் எனக்கு எதுக்கு ஒருத்தர் என் கார வாங்கிகிட்டு பணத்தை கொடுத்து..

முதல்ல அப்பாவோட ஆபரேஷனுக்கு பணம் கட்டு மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னாரு காரை வித்து கொடுத்தவன் கமிஷன் வாங்காமல் அப்பாவ பாருன்னு சொல்லி இருக்கான் இப்படி நல்ல மனுஷங்க நிறைய பேர் இருக்காங்க உன்னோட உதவி தேவை இல்லை என ரவியை திட்டி திரும்ப அனுப்பி விட்டார்.

இதெல்லாம் மறைந்திருந்து மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அடுத்து அண்ணாமலையை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்கின்றனர்.. பிறகு விஜயாவும் ரோகிணியும் கோவிலுக்கு போய் அண்ணாமலைக்காக வேண்டி கொண்டிருக்கின்றன அப்பொழுது மீனாவும் அந்த கோவிலில் மாமாவிற்காக வேண்டிக் கொண்டிருக்கிறார் பிறகு விஜயாவை பார்த்ததும் மீனா மறைந்து கொண்டுள்ளார்..

அடுத்து அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றிவிட்டனர்.. அப்பொழுது முத்து மனோஜ் வேறொரு வேலையாக வெளியே வந்ததும் பரசு மட்டும் அண்ணாமலை கூட இருந்தார் அப்பொழுது மீனா வந்து பரசுவிடம் சொல்லிவிட்டு மாமனாரை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்..

பிறகு பூசாரி கொடுத்த அந்த கயிறையும் மாமனார் கையில் கட்டி விட்டு முத்து, மனோஜ் ரூமுக்கு வருவதற்குள் மீனா வெளியே வந்து விட்டார். அடுத்து ரவி வீட்டுக்கு போய் சுருதியிடம் அப்பாவ என்ன யாரும் பார்க்க விடல என்னால தான் அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சுருதியிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறார்.. ஸ்ருதி ரவியை சமாதானப்படுத்துகிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.