ஸ்ருதியால் ரோகினிக்கு வந்த பிரச்சனை!! உங்க அப்பா வந்தே ஆகணும் என கட்டளை இட்ட விஜயா!! நாலாப் பக்கமும் மாட்டி மொழிக்கும் ரோகினி..

சிறகடிக்கும் ஆசை 2 இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியிடம் மனோஜ்க்கு பணம் கொடுத்து உதவவில்லை என சண்டை போடுகிறார். படிப்பறிவே இல்லாத முத்துவுக்கு மீனா கார் வாங்கி கொடுத்திருக்கா. ஆனா நீ என் பையன் இவ்ளோ படிச்சிருக்கான் வசதி இருந்தும் ஒன்னுமே செய்யல உங்க அப்பா கிட்ட பேசி சீக்கிரமா என் பையனுக்கு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி அவனை முதலாளியா உட்காரவை என சண்டை போடுகிறார்.

அதனைத் தொடர்ந்து ரோகினி மீனாவிடம் முத்துவே காசு போட்டு கார் வாங்கிட்டு உங்களை பெருமைப்படுத்துவதற்காக நீங்க வாங்கி கொடுத்தீங்கன்னு பொய் சொன்னாரு தானே என கேட்கிறார். அதற்கு மீனா அப்படியெல்லாம்  பொய் சொல்லணும்னு அவசியம் இல்லை என  சொல்கிறாள், உடனே ரோகிணி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பெரிய பெரிய மேரேஜ் எல்லாம் போயி சம்பாதித்து கார் வாங்க முடியல நீங்க ஒரே நாள்ல பூ கட்டி கார் வாங்குனேன்னு பொய்தானே சொல்றீங்க, இல்ல வெளியே ஏதாவது கடன் வாங்கி இருக்கீங்களா எப்படி நீங்க கார் வாங்கினீங்க என மீனாவை துருவி துருவி கேள்வி கேட்கிறார். அதோடு மட்டுமில்லாமல் உங்க புருஷன் உங்கள கொடுமைப்படுத்துறாரு  அவருக்கு போய் ஏன் நீங்க கார் வாங்கி கொடுத்தீங்க நீங்க செஞ்சா அதோட ரிஃப்ளக்ஷன் மத்தவங்களையும் பாதிக்கும்முன்னு உங்களுக்கு தெரியாதா என பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிறகு சுருதி ரோகிணியை பார்த்து மீனா கிட்ட நீங்க பேசறது சரி இல்ல அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல மூணாவதா ஒரு ஆளு உள்ளவரது  தப்பு, புருஷன் பொண்டாட்டி அவங்க அடிச்சுப்பாங்க சேர்ந்துப்பாங்க அதுக்காக எதுவும் செய்யக்கூடாதுன்னு இருக்கா நீங்க ஏன் இப்படி எல்லாம் கேக்குறீங்க என ரோகிணியை கேட்க அதற்கு ரோகிணி நான் 3வது ஆள் கிடையாது.  நம்ம எல்லாம் ஒரே குடும்பம் தான எனச் சொல்கிறாள். இருந்தாலும் இந்த விஷயத்துல நீங்க தலையிடறது ரொம்ப தப்பு, ஆமா நீங்களும் தான் உங்க ஹஸ்பண்டுக்கு ஏதோ பிசினஸ் ஆரம்பிச்சு தரப்போறீங்கன்னு அத்தை சொன்னாங்க, போன வாரம் உங்களுக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் சண்டை தானே   என சுருதி சொல்ல அங்கிருந்து ரோகிணி அசிங்கப்பட்டு வந்து விடுகிறாள்.

அடுத்த சீனில் ஸ்ருதியின் அம்மா விஜயா வீட்டிற்கு வருகிறார். ஸ்ருதியின் அம்மா  விஜயாவிடம் சுருதியும் ரவியும் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டாங்க அதுக்காக அப்படியே விட்ற முடியாதுல அவங்களுக்கு தாலி பிரித்து கோக்குற பங்ஷனா கிராண்டா வைக்கலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன் என சொல்கிறாள்

விஜயாவும் ஃபங்ஷன் கிராண்டா வைக்கலாமே என சொல்கிறாள்.  அதோடு ரோகிணி எங்க வீட்டோட மூத்த மருமகள் அவளுக்கும் இன்னும் தாலி பிருச்சி கோக்கல. அவளுக்கும் ஸ்ருதியோடு சேர்த்து பண்ணிடலாம் என விஜயா சொல்கிறாள்.

அதற்கு ஸ்ருதியின் அம்மா சரி ரெண்டு பேருக்கும் சேர்த்தே செஞ்சுடலாம் என சொல்றாங்க உடனே ஸ்ருதி அம்மா போனதும் விஜயா ரோகினிய கூப்பிட்டு உங்க அப்பாவை இந்த பங்க்ஷனுக்கு கண்டிப்பா வர சொல்ல பாரு ஸ்ருதி அம்மா எவ்வளவு பொறுப்பா இருக்காங்க. ஆனா உங்க அப்பா இதுவரையும் இந்த பக்கம் வந்து கூட பார்த்ததில்லை. அவரு எப்படி இருப்பார்ன்னு கூட எனக்கு தெரியல. இந்த பங்க்ஷன்க்கு கண்டிப்பா அவர் வந்தே ஆகணும் இல்லனா நடக்கிறதே வேற என்ன ரோகிணியை முறைக்கிறாள்.

என்ன உங்க அப்பா உனக்காக ஒரு ரெண்டு நாள் கூட வர மாட்டாரா வந்தே ஆகணும் இல்லனா அவ்வளவுதான் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். ரோகினி பார்லருக்கு போய் நடந்த அனைத்தையும் தனது தோழியிடம் சொல்கிறாள்.

பிறகு அடுத்த சீனில் முத்து நைட் வரும்போது மீனாவுக்காக பூ, ஸ்வீட் வாங்கி வருகிறார்.அப்போது விஜயா வந்ததும் முத்து ஸ்வீட்டை மறைத்து வைக்கிறார். விஜயா மீனாவிடம் பால் காய்ச்ச சொன்னேன்ல்ல  எங்க என கேட்கிறார். இந்தாங்க என மீனா கொடுக்க உடனே விஜயா பாத்திரம் விளக்கிட்டியா, மாவு ஆட்டி வச்சிட்டியா, என ஒரே வேலையாக கொடுக்கிறார். உடனே முத்து அந்த ரெண்டு எஜமானிங்க எங்க அவங்க கைலாம் என்ன பூவா பறிக்குது. எல்லா வேலையும் இவதான்  செய்யணுமா இவ என்ன உங்களுக்கு வேலைக்காரியா என கேள்வி கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.