விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி!! இதுக்கு மேல ஓன் பருப்பு வேகாது மா.

சிறகடிக்க ஆசை தற்போதைய ப்ரோமோவில் ரோகிணி எங்க அப்பா வருவாரு வருவாரு என சொல்லி விஜயாவை ஏமாற்றிக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான விஜயா உனக்கு அப்பா இருக்காரா இல்லையா, இல்ல ஏன்  காதுல பூ  சுத்துறியா என கேட்கிறார்.

அதற்கு ரோகிணி  இல்ல ஆன்ட்டி எங்க அப்பா ஏன் வரலைன்னு எனக்கே தெரியல எனக்  கூற கோபமான விஜயா  உங்க அப்பா என்ன மலேசியா நாட்டுக்கு அதிபதியா வரேன் வரேன்னு சொல்லிட்டு வராம இருக்க என்ன கோபப்படுத்தி பார்க்காத உங்க அப்பா வரலைன்னா உனக்கான இடம் இந்த வீட்டில எதுன்னு நா தான் முடிவு பண்ணனும் என கோபமாக சொல்கிறார்.

 உடனே ரோகிணி அழுகிறார். இந்த அழுது நீலிக்கனி வடிச்சதெல்லாம் போதும் இனிமேலும் இந்த கதையை நான் நம்ப மாட்டேன் என விஜயா திட்ட வட்டமாக  சொல்கிறார். அதனால் ரோகிணி பயப்படுகிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.

 ரோகினி ஒவ்வொரு தடவையும்  விஜயாவிடம் எதையாவது சொல்லி பிளான் போட்டு நடித்து தப்பித்து விடுகிறார். இந்த தடவை என்ன செய்வார் என்று பொறுத்துதான் பார்க்கணும். ரோகினி விஜயாவிடம் மாட்டி சிக்கி தவிக்கணும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கமெண்டில் தெறிக்கவிட்டு வருகின்றனர். அப்படியாவது மீனா விஜயாவிடம் இருந்து தப்பிப்பரா. பொறுத்திருந்து இந்த வாரம் என்ன நடக்குது என பார்க்கலாம்.