நாம ஒண்ணா இருந்ததுக்கு பணம் சரியா போச்சு மனோஜ்.. அணுகுண்டை வீசிய ஜீவா அதிர்ச்சியான போலீஸ்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஜீவாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அப்பொழுது மனோஜ் என் பணத்தை கொடுத்து விட்டால் தான் விட முடியும் இல்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே போக முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார். ஆனால் ஜீவா பணமும் தர முடியாது ஒன்னும் தர முடியாது நாம ஒண்ணா ஒரு வருஷம் வாழ்ந்தோம் அதுக்கு சரியா போச்சு என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ஜீவாவின் வக்கீலும் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஜீவா கூறியதாவது முதலில் கனடா போவதற்கு எனக்கு விசா கிடைத்து விட்டது ஆனால் மனோஜ்க்கு கிடைக்கவில்லை அதனால் மனோஜ் நான் பிறகு வருகிறேன் நீ போ என்று கூறினார் என அப்பட்டமாக பொய் சொல்லுகிறார் ஆனால் பணத்தை அவருடைய சம்மதத்துடன் தான் நான் ட்ரான்ஸாக்ஷன் பண்ணினேன் என ஆதாரத்தை காட்டுகிறார்கள். உடனே ரோகிணி எதுக்கு மனோஜ் படிச்சு பாக்காம கையெழுத்து போட்டீங்க என கேள்வி கேட்கிறார்.

ராஜி எடுத்த முடிவால் ஆட்டம் கண்ட குமார் குடும்பம்.. தங்கமயில் ரொம்ப ஓவர் பர்பாமன்ஸா இருக்கு..

அதேபோல் போலீசிடமும் அவர் என் கூட ஒண்ணா இருந்ததற்கு அந்த பணம் சரியா போச்சு இதுக்கு மேல என்னால பணம் கொடுக்க முடியாது இவங்க ரெண்டு பேரும் என்னை மிரட்டி பணம் வாங்க பார்க்கிறார்கள் என கூறுகிறார் ஆனால் போலீஸ் அப்போ பணத்தை நீ தான் எடுத்துக்கிட்டு போயிருக்க அதனால கண்டிப்பா உன்ன அரெஸ்ட் செய்ய வேண்டிய நிலைமை வரும் நாங்க அரஸ்ட் செஞ்சா நீ எங்கேயுமே போக முடியாது.

அதனால நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வந்துருங்க என பேசுகிறார்கள். ரோகிணி பணத்த திருடிட்டு நாடகம் ஆடுற என கேவலமாக பேச திருடனான நான் எதுக்கு திருடனும் என ஜீவா பேசுகிறார். மற்றொரு பக்கம் மீனாவின் வண்டி போலீஸ் எடுத்து வந்துள்ளதால் போலீசிடம் மீனா கெஞ்சி பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் லைசென்ஸ் இருக்கிறது ஆர்சி புக் இருக்கிறது என்கிட்ட எல்லாமே இருக்கிறது என கூற நோ பாக்கியங்கள் எதற்கு வண்டியை நிறுத்தினாய் என போலீஸ் கேட்கிறார்கள் தெரியாமல் நிறுத்திவிட்டேன் என கூறுகிறார் டிராபிக் போலீஸ் வந்தவுடன் பைன் கட்டி விட்டு எடுத்துச் செல்லுங்கள் என கூறுகிறார்கள்.

பணத்தை கொடுக்க முடியாது என திமிராக பேசும் ஜீவா.. கதறும் மனோஜ்.. மீனா செய்த தவறால் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்த முத்து.

சமயத்தில் மீனா முத்துவுக்கு போன் பண்ணி நடந்ததை கூறுகிறார் உடனே முத்து வந்து நீ எதுக்கு நோ பார்கிங்கில்  வண்டியை நிறுத்தின ஏற்கனவே இது மாதிரிதான் எண்ணெய்யை நிறுத்த சொல்லி பைன் கட்ட வச்ச இப்ப நீயே மாட்டிக்கிட்ட சரி அழாத எப்படியாவது நம்ம வாங்கிடலாம் பைன் கட்டி எப்படியாவது எடுத்துட்டு போயிடலாம் என பேசுகிறார் அதற்கு மீனா ரொம்பவும் பீல் பண்ணுகிறார் நீங்க வாங்கி கொடுத்த வண்டி இப்படி போயிடுச்சு எனக் கூறுகிறார்.

உடனே தெரிஞ்ச போலீஸ் வந்ததால் அவரிடம் நடந்ததை கூறி கேட்கிறார்கள் டிராபிக் போலீஸ் வந்தவுடன் வாங்கிக் கொள் நானும் பேசுகிறேன் என முத்து விடம் அந்த போலீஸ் கூறுகிறார்கள். மற்றொரு பக்கம் ஜீவாவை போலீஸ் மிரட்டிக் கொண்டிருக்கிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.