பாட்டியை வைத்து விஜயாவை பழி தீர்க்கும் முத்து.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோவில் வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் கொண்டாடுவதற்காக பாட்டி ஊருக்கு செல்கின்றனர்.சந்தோஷமாக அனைவரும் வீட்டுக்குள் செல்கின்றனர் போனதுமே விஜயா மீனாவை சமைக்க சொல்கிறார். உடனே அதற்கு பாட்டி உங்க வீட்ல தான் அவ தினமும் சமைக்கிறா இங்கேயுமா .

இது என் வீடு நீ தான் என் மருமக நீ தான் இங்க சமைக்கணும் என விஜயாவிடம் கூறுகிறார் உடனே விஜயா சமைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதி காய் நறுக்குகிறார். மீனாவை கூப்பிட்டு பாட்டி தனது பக்கத்தில் சோபாவில் அமர சொல்கிறார்.

சமைத்து முடித்துவிட்டு சாப்பிட உட்காரும்போது சுருதி காய் நறுக்கும்போது என் விரலை  நறுக்கிக்கிட்டேன் என்னால சாப்பிட முடியல நான் ஸ்பூனால சாப்பிடுகிறேன் என சொல்கிறார். உடனே விஜயா அவளுக்கு ஊட்டி விடுகிறார்.

அதற்கு பாட்டி அனைவருக்கும் ஊட்டி விடு என சொல்கிறார். ஊட்டும் போது மீனாவிற்கு மட்டும் சாணி அப்புவது போல் வாயில் வைத்து பூசுகிறார் மற்ற இருவருக்கும் பாசமாக ஊட்டுகிறார். அதற்கு பாட்டி அனைவரையும் ஒன்றாக பார் பாரபட்சம் பார்க்காதே என திட்டுகிறார். உடனே விஜயா மீனாவிற்கும் பொறுமையாக ஊட்டி விடுகிறார். பின்னர் பாட்டி முத்துவிடம் சைகை காட்டி சிரிக்கிறார். பாட்டி வீட்டில் இருக்கும் வரை விஜயாவை வைத்து செய்து விடுவார்.

எப்படியும் பொங்கலுக்கு விஜயாவை பொங்க வைத்து விடுவார் பாட்டி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.