அண்ணாமலையை பார்க்க விடாமல் மீனாவை துரத்தி விடும் விஜயா, மனோஜ்..! கண்டுகொள்ளாமல் நிற்கும் முத்து – சிறக்கடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

Siragadikka Aasai October 30th to November 03 promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி, ஸ்ருதி கல்யாணத்தால் வீட்டில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.. அண்ணாமலையை கைது பண்ணி ஸ்டேஷனில் வைத்து பிறகு ரவி, ஸ்ருதி ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வந்து நாங்க மேஜர் சட்டப்படி கல்யாணம் பண்ணி இருக்கோம் என்று சொல்ல அண்ணாமலையை போலீஸ் ரிலீஸ் செய்து விட்டனர்.

ஆனால் இந்த கல்யாணத்திற்கு மீனாவும் உடந்தை என்று முத்து மீனாவை வீட்டிற்குள் சேர்க்கவில்லை மீனா எவ்வளவோ சொல்லியும் முத்து கேட்கவில்லை.. தற்பொழுது மீனா அவங்க அம்மா வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் ரவி இப்படி நம்ப அப்பாவையாவும் அவமானப் படுத்திட்டானே என்று சோகத்தில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது சில வாக்குவாதங்களால் முத்து மனோஜை அடிக்க கைநோங்கும் போது அந்த அடி ரோகிணி மேல் பட்டுவிட்டது..

தமிழின் வாழ்க்கையை கூறு போட்ட நமச்சி.! மேக்னா மனதில் துளிர்விடும் காதல்.! அட கருமம் கருமம் இப்படி ஒரு கதையா.?

இதனால் முத்துவும் மனோஜும் மாறி மாறி சண்டை போட்டு கொள்கின்றனர் இதை பார்த்து அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கின்றனர். இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் ஒருவர் மீனா வீட்டிற்கு வந்து மீனாவிடம் ஹாஸ்பிடலுக்கு போகலையா உங்க மாமா ஹாஸ்பிடலில் இருக்காங்க என்று சொல்ல மீனா பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அங்கு விஜயா மீனாவை பார்த்து இங்கே எதற்கு வந்த உன்னை நம்பினதுக்கு தான் அவருக்கு இப்படி ஆயிடுச்சு என விஜயா சொல்ல மீனா நான் மாமாவ ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன் என்று கேட்க..

உண்மையை சொல்றவன் தெய்வத்துக்கு சமம் என்று சொல்லுவாங்க.. லியோ படத்திற்கு வரும் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு

அவரை நீ பார்க்க கூடாது போடி வெளியே என துரத்துகிறார்  மனோஜும் கூட சேர்ந்து மீனாவை வெளியே போக சொல்லி துரத்துகின்றனர்.. அப்பொழுது ரிசப்ஷனில் போன் பேசிக் கொண்டிருக்கும் முத்துவையும் மீனா பார்க்காமலே வெளியே போகும்படியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.