ஒயின் ஷாப்பிற்கு சென்று செவுளில் அறைந்து உண்மையை கண்டுபிடித்த மீனா.. முத்து மீது விழுந்த பழியை ஒரே நொடியில் துடைத்தபொண்டாட்டி..

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது பெரும் பழி விழுந்துள்ளது குடிக்காமலேயே குடித்ததாக வீடியோ எடுத்து சிட்டி சோசியல் மீடியாவில் பப்ளிஷ் செய்து விடுகிறார் இதனால் முத்து மீது அனைவரும் தப்பாக நினைக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஸ்ருதியின் அப்பா கமிஷனருக்கு கால் செய்து இதையெல்லாம் கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா என கேட்க உடனடியாக ஆர்டர் போட்டு முத்துவின் காரை பறிமுதல் செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் லைசன்ஸை கேன்சல் செய்ய சொல்கிறார்கள்.

ஆனால் முத்து வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் குடிக்கவில்லை என எவ்வளவு சொல்லியும் அனைவரும் நம்பவில்லை அது மட்டும் இல்லாமல் அவருடைய அப்பா அண்ணாமலையும் முத்து எவ்வளவு கூறியும் நம்பாமல் மனோஜை அடிக்க கை ஓங்க உடனே அண்ணாமலை முத்துவை அடிக்க கை ஓங்குகிறார் இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீனாவும் முத்துவை நம்பவில்லை இது முத்துவுக்கு  மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது ஆனாலும் முத்துவை எப்படியாவது திருத்த வேண்டும் என பச்சலை வாங்கி ஜூஸில் கலந்து கொடுக்க முயற்சி செய்கிறார் அதனை விஜயா எடுத்து குடித்து விடுகிறார் இதனால் விஜயாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிறது இதனை வைத்து மீனாவை அவர் திட்டுகிறார்.

மற்றொரு பக்கம் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நான் குடிக்கவில்லை என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க சொல்கிறார்கள். முத்து அந்த இடத்தில் மிகப் பெரிய அவமானத்தை சந்திக்கிறார். அதேபோல் சத்தியா சிட்டியிடம் போன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எந்த ஒரு மகராசனோ வீடியோ எடுத்து பிரபலப்படுத்தி விட்டான் அவன் நல்லா இருக்கணும் என பேசிக்கொண்டு இருக்க அதனை மீனா கேட்டு விடுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா ஒயின்ஷாப்பிற்கு சென்றுள்ளார் அங்கு நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக போகிறார் அப்பொழுது ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் அப்லோட் செய்ய முயற்சி செய்யும்போது மீனா செவுளில் அறைந்து நான் என் புருஷன் மீது தப்பு இல்லை என்று நிரூபிக்க வேண்டும் அதற்காக வந்தேன் எனக் கூறுகிறார் இந்த நிலையில் ஒயின்ஷாப்பிற்கு வந்த மீனா உங்க பொண்ணா நெனச்சு எனக்கு இதில் ஹெல்ப் செய்யுங்கள் என சிசிடிவி காட்சியை பார்க்க அனுமதி கொடுக்கிறார்கள்.

சிசிடிவி காட்சியைப் பார்த்த மீனா முத்து மீது தப்பு இல்லை என தெரிந்து கொள்கிறார் உடனே முத்துவை மீனா ஓடி சென்று நான் தவறு செய்து விட்டேன் என கட்டிப்பிடிக்கிறார் ஆனால் தவறு செய்தது வீடியோ எடுத்தது யார் என்பதை மீனா கண்டுபிடித்து விடுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது..

Exit mobile version