ரோகினி உன் மேட்டர் தெரிஞ்சா உன் நிலைமை என்ன தெரியுமா.? இந்த சின்ன பொய்க்கே இந்த ஆட்டம் ஆடுற…

siragadikka aasai : இன்றைய எபிசோடில்  முத்து மனோஜ்க்கு குறும்படத்தை போட்டு காமிக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ஷாக் ஆகி நிற்கிறார் மனோஜ். வீட்டில் உள்ள அனைவரும் மனோஜை  பார்த்து மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். மனோஜ் பதில் சொல்லாமல் மழுப்புகிறார். ரோகிணி மனோஜிடம் கோபப்பட்டு  ரூமுக்கு சென்று கதவை மூடுகிறாள்.

உடனே மனோஜ் அப்பா மனோஜை கூப்பிட்டு நீ இவ்வளவு நாள் என்னென்னமோ பித்தலாட்டம் செய்திருக்க உன்ன பத்தி எங்களுக்கு தெரியும் நாங்க பொறுத்து போவோம். ஆனால் ரோகிணிக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது போய் முதல்ல அவள  சமாதானப்படுத்து என கூறுகிறார்.

மனோஜ் ரோகினியை சமாதானப்படுத்த உள்ளே போகிறார்.. ரோகினி நீங்க என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க வீட்ல இருக்குற மத்தவங்க முன்னாடி என்ன ரொம்ப அசிங்கப்படுத்திடிங்க, இப்ப பாருங்க முத்து, மீனா, அந்த புது பொண்ணு எல்லாம்  என்னை எப்படி கேள்வி கேக்குறாங்க அவங்க மூஞ்சுல நான் எப்படி முழிப்பேன். என்கிட்டயாவது நீங்க வேலை இல்லாம இருக்கீங்க என்கின்ற உண்மையை சொல்லி இருக்கலாம் எனக்கூறி அழுகிறாள்.

நான் வேலை இல்லைன்னு தெரிஞ்சா முத்து என்ன ரொம்ப அசிங்கப்படுத்துவான் அதனால் தான் நான் சொல்லல எனக் கூறுகிறான். அதனைத் தொடர்ந்து ரோகினி அவளது தோழியை பார்க்க வீட்டுக்கு செல்கிறார். அங்கு நடந்த அனைத்தையும் கூறி ரொம்ப வருத்தப்படுகிறார்.

அதற்கு அவளது தோழியோ நீ மறைக்கிற விஷயத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னும் பெருசு இல்ல. அதனால இதை பெருசு படுத்தாம அப்படியே விட்டுடு  எனக் கூறுகிறார். உடனே ரோகிணி இல்லை நான் அவர ரொம்ப காதலிச்சேன் அவர் ரொம்ப இன்னசென்ட் என நினைச்சு தான் கல்யாணம் செய்து கொண்டேன். ஆனா அவரு எனக்கு உண்மையா இல்லை என வருத்தப்படுகிறாள். பிறகு ரோகினியின் தோழி டீ போட சொல்லுகிறார். திரும்ப வந்து பார்க்கும்போது அங்கு  ரோகிணி இல்லை இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.