வாசுதேவனை பளார் என்று அறைந்த முத்து.! ஹனிமூன் போறதுக்கு காசு இல்லாமல் தவிக்கும் மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai september 13 : இன்றைய எபிசோடு வாசுதேவன் ஆள் வைத்த ரவியை அடித்த கோபத்தில் முத்து நேராக அவர் வீட்டுக்கு போய் என் மேல இருக்கிற கோபத்தை என் தம்பி கிட்ட காமிக்கிரியா என வாசுதேவனை ஓங்கி அறைந்து விட்டார்..

அதற்கு அவர்கள் உங்கள் மூஞ்சில எல்லாம் முழிக்க கூடாது என்று தான் இருந்தோம் என் பொண்ணு பின்னாடி உன் தம்பி சுத்துறான் நான் ஆன் பண்ணி திரும்ப என் பொண்ணு கூட பேசிட்டு இருக்கான் என்று சொல்ல முத்து ரவி கிட்ட என்னடா இது என்று கேட்க, ரவி அமைதியாக இருக்கிறார்.

பின்பு வெளியே வந்து நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் தான் அண்ணா என்று சொல்ல இவன் பொண்ணு கூட உனக்கு என்ன பிரிண்ட்ஷிப் வேண்டி கிடைக்கும் இதோட நிறுத்திக்க இல்லடா நானே உன்னை அடிப்பேன் என முத்து வான் பண்ணுகிறார். பிறகு ரோகிணி மனோஜிடம் இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு சம்பளம் வந்துரும் இனிமே நமக்கு தேவையானது.

நம்மளை வாங்கிக்கலாம் உங்க தம்பி அன்னைக்கு அப்படி பேசினாரு என சொல்லிவிட்டு பிறகு உங்க ஆபீஸ்ல ரெண்டு மூணு நாள் லீவு சொல்லி வச்சுருங்க நம்ம அந்தமான் போலான்னு சொல்லி இருந்தோம்ல அதுக்கு டிக்கெட் புக் பண்ணிடுங்க என்று சொல்கிறார் ஆனால் மனோஜ் கைல காசு இல்லையே என்ன பண்றது என நினைத்து அவர்வேலை பார்த்த கார் ஷாப்புக்கு..

சென்று நான் இங்கு இருவது நாள் போல வேலை செய்து இருக்கேன் அதுக்கான சம்பளத்தை ஐயாவை பார்த்து கேட்கலாம்னு வந்து இருக்கேன் என்று ஒருவரிடம் சொல்லும்போது நீ கொஞ்ச நாள் இங்க வந்துட்டு போன நீ வந்து ஒரு காரை கூட சேல்ஸ் பண்ணல நீ வேலையே செய்யல உனக்கு அய்யா சம்பளம் தர மாட்டாரு..

உன் மேல செம காண்டுல இருக்காரு உன்னை பார்த்தாலே அடிப்பாரு என்று சொல்வது மனோஜ் திரும்பி போகிறார் அடுத்து முத்து இனிமே  ஸ்ருதி கிட்ட பேசக்கூடாது என்றதால் ஸ்ருதி போன் பண்ணியும் ரவி அட்டென்ட் பண்ண மாட்டேங்குறாரு அதனால் ஸ்ருதி மீனாவுக்கு போன் பண்ணி எப்படி இருக்கீங்க என்று கேட்டு விட்டு ரவி..

எங்க இருக்காரு என்று கேட்கிறார் ரவி வீட்ல தான் இருக்காரு என்று மீனா சொல்கிறார் பிறகு ஸ்ருதி இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்வதும் மீனா நானே உங்களுக்கு சமைத்து ஸ்டுடியோக்கு எடுத்துட்டு ரவி கூட வரேன் என்று சொல்கிறார்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..