ஜீவாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் மறைக்கும் மனோஜ், ரோகினி.. நோண்டி நோண்டி கேள்வி எழுப்பும் முத்து..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய ப்ரோமோவில் ஜீவா மேக்கப் பண்ணுவதற்காக ரோகிணி பார்லருக்கு சென்றுள்ளார் அப்பொழுது ரோகினி ஜீவாவை கண்டுபிடித்த மனோஜிடம் சொல்ல இருவரும் இணைந்து ஜீவாவை பிடித்து விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் போலீசில் புகார் கொடுக்கிறார்கள் உடனே ஜீவாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். மனோஜ் அங்கு என்னுடைய பணத்தை கொடுத்தால் தான் விடுவேன் என கூற நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்ததுக்கு பணம் சரியா போச்சு என கூறுகிறார் ஜீவா.

நீ எல்லாம் ஒரு பொம்பளையா ஒன்னா இருந்ததுக்கு பணம் சரியா போச்சுன்னு சொல்ற இதுக்கு பேரு வேற என ரோகிணி கேவலமாக பேசுகிறார் மற்றொரு பக்கம் மீனா நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதால் போலீஸ் வண்டியை தூக்கி கொண்டு வந்து விட்டார்கள் உடனே மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் தர மறுக்கிறார்கள் விஷயத்தை முத்துவிடம் கூற முத்துவும் வந்து கேட்டு பார்க்கிறார் ஆனால் தர முடியாது எனக் கூறி  விடுகிறார்கள்.

நாம ஒண்ணா இருந்ததுக்கு பணம் சரியா போச்சு மனோஜ்.. அணுகுண்டை வீசிய ஜீவா அதிர்ச்சியான போலீஸ்..

ட்ராபிக் கான்ஸ்டபிள் வந்தால் தான் நீங்கள் பைன் கட்டி விட்டு வண்டியை எடுக்க முடியும் என கூற இருவரும் வெயிட் பண்ணுகிறார்கள் அந்த சமயத்தில் ஜீவாவிடம் போலீஸ் நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறது பணத்தை நீங்கள் தான் எடுத்து சென்றது என்று திட்டவட்டமாக தெரிகிறது எங்க ஸ்டைலில் விசாரித்தால் உண்மை வந்துவிடும் தேவை இல்லாம அந்த லெவலுக்கு போக வேண்டாம் முடிஞ்ச அளவு காம்ப்ரமைஸ் ஆகுங்கள் என பேசுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஜீவா வக்கீலிடம் இதற்கு என்னதான் சொல்யூஷன் என கேட்க நீங்க காம்ப்ரமைஸ் ஆகி தான் ஆக வேண்டும் அப்பொழுது தான் நீங்க இங்க இருந்து கிளம்ப முடியும் என கூறுகிறார் உடனே ஜீவா பணத்தை மனோஜ் வங்கி கணக்கில் போடுகிறார் மனோஜம் பணம் வந்துவிட்டது எனக் கூற வீட்டுக்கு சென்றவுடன் எனக்கு வேலை இல்லைன்னு கஷ்டப்பட்டு இருந்தா ஆனா இப்ப என் அக்கவுண்ட் 15 லட்சம் இருக்கிறது எனக் கூறுகிறார்.

ராஜி எடுத்த முடிவால் ஆட்டம் கண்ட குமார் குடும்பம்.. தங்கமயில் ரொம்ப ஓவர் பர்பாமன்ஸா இருக்கு..

ஆனால் மனோஜ் அவருடைய மாமனார் போட்டது போல் சொல்லி விடுகிறார் இது முத்துவுக்கு டவுட் வருகிறது உடனே ரோகிணி அக்கவுண்டில் போடாமல் எதற்காக உங்கள் மாமனார் அக்கவுண்டில் போட்டுள்ளார் என கேள்வி எழுப்புகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஜீவாவுக்கு சாட்சியாக முத்து தான் கையெழுத்து போட்டு உள்ளார் கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்சனை வெடிக்கும் அப்பொழுது உண்மை அனைத்தும் தெரியவரும் இதனால் ரோகினி சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போதைய கதையில் ரோகிணிக்கு சாதகமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version