பரிகாரம் என்ற பெயரில் கையில் சூடத்தை ஏற்றிய விஜயா.. கதறி அழும் ரோகிணி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி இடம் உங்க அப்பா ஜெயலில் இருக்கிறார் அதனால் அவர் வெளியே வர ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் நீ சாமிக்கு ஒரு மண்டலம் விரதம் எடுத்து கும்பிட வேண்டும் என கூறுகிறார் நான் எதுக்கு ஆண்டி செய்யணும் நீங்களே செய்யலாமே என பேச உங்க அப்பா தான ஜெயிலில் இருக்கிறார் என விஜயா பதிலுக்கு பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என விஜயா கூறுகிறார்.

உடனே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அப்போது முத்துவையும் மீனா கோவிலுக்கு அழைக்கிறார் முத்து மனோஜிடம் இருந்து 27 லட்சத்தை திருடிய பெண்ணுடன் வந்து கொண்டிருக்கிறார் அவர்தான் திருடியது என்று முத்துக்கு தெரியாது. இந்த நிலையில் அவரையும் கோவிலுக்கு அழைத்து வருகிறார். பச்சைத் தண்ணியை மேலே ஊற்றி ரோகினியை புடவை மாற்ற சொல்கிறார்கள்.

விஜய் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கிய திரைப்படத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட்டான கதை தெரியுமா.. அட இந்தப் படமா..?

தற்பொழுது ஒரு புதிய பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் நெற்றியில் திருநீரை அடித்து சாமிக்கு தோப்பு கரணம் போட சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரோகிணி கையில் சூடத்தை ஏற்றி எரிய விடுகிறார் ஆனால் ரோகினி அய்யோ அம்மா என அலறி அடித்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சூடத்தை கீழே போடுகிறார்.

மேலும் சாமியை சுத்தி உருள சொல்கிறார் இப்படி ரோகிணியை பரிகாரம் என்ற பெயரில் விஜயா கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.