இரட்டை அர்த்தமுள்ள பாடல் வரிகளால் குஷ்பு, மீனாவை அபிஷேகம் செய்த பாடல் ஆசிரியர்கள்.! அதிலும் இவர் கொஞ்சம் மோசம் தான்..

ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் அதில் இந்த நடிகர், நடிகைகள் நடித்தால் அந்தப் படம்  ஹிட்டடிக்கும் இது அனைத்தும் ரொம்ப முக்கியம். அதே வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடங்களுக்கும் திரைக் கதைக்கும் ஏற்றார் போல் இருக்க வேண்டும். எனவே திரைக்கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ அதே அளவிற்கு அப்படத்தில் இடம்பெறும் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

அந்த வகையில் ஒருசில பாடலாசிரியர்கள் இயற்கை மற்றும் காதலை மையமாக வைத்து சாதாரணமாக பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவார்கள். இன்னும் சில பாடலாசிரியர்கள் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகைகளை வைத்து இரட்டை அர்த்தமுள்ள பாடல்களை பாடி அசத்தி இருப்பார்கள்.

தற்பொழுது உள்ள பாடலாசிரியர்களை விட இதற்கு முன்பு இருந்த பாடலாசிரியர்கள் தான் வித்தியாசமாக யோசித்து நடிகைகளை வைத்து இரட்டை அர்த்தமுள்ள  பல பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் எந்தெந்த நடிகைகளை வைத்து இரட்டை அர்த்தமுள்ள பாடல்களை எந்த பாடலாசிரியர் எந்த படத்தில் பாடி உள்ளார் என்பதை தற்பொழுது காண்போம். அந்த வகையில்,

குஷ்பு: குஷ்பூ நடிகையாக நடித்து வந்த காலகட்டத்தில் மிகவும் குண்டாக பப்ளிமாஸ் போல இருந்ததால் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பல கவர்ச்சி நடனங்களையும் ஆடி இருந்தார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த பாடல் கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ இந்தப்பாடல் இன்று வரையிலும் ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்பாடலை வைரமுத்து  தனது மூளையைக் கசக்கிப் பிடித்து இவ்வாறு பாடியுள்ளார்.

மீனா : நடிகை மீனா இணைந்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் நாட்டாமை. இத்திரைப்படத்தில் மீனா எப்படி நடித்து இருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இப்படத்தில் மீனா மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள். இப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார் இப்பாடத்தில் இடம் பெற்றிருந்த மீனா பொண்ணு என்ற பாடலை வைரமுத்து பாடியிருந்தார். இப்பாடல் முழுவதும் மீனாவை மட்டுமே மையமாக வைத்து பாடப்பட்டது.

நதியா: தனது அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் நடிகை நதியா என்றுதான் கூறவேண்டும்.  இவர் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக பூ மழை பொழியுது திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் நதியா நைல் நதியா என்றே நதியாவை மையமாக வைத்து இப்பாடல் எழுதப்பட்டது.

ஜோதிகா : நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் மாயாவி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் ஜோ ஜோ ஜோ ஜோதிகா என்ற பாடல் ஜோதிகாவை மையமாக வைத்து எழுதப்பட்டது. இப்பாடலை பழனிபாரதி என்ற பாடலாசிரியர் பாடியிருந்தார்.

இவ்வாறு இரட்டை அர்த்தமுள்ள பாடல் பாடியவர்களில் வைரமுத்து மட்டும் தான் இரண்டு நடிகைகளை மையமாக வைத்து பாடி உள்ளார்.

Leave a Comment

Exit mobile version