கல்லாப் பெட்டியை நிரப்பும் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படம் – 3 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இவர் அண்மை காலமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த படங்களும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வரிசையில் கடைசியாக சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் வெந்து தணித்தது காடு இந்த படத்தை கௌதம மேனன் இயக்கியுள்ளார் இதுவரை சிம்புவும், கௌதம் எனும் இணைந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெற்றி படங்களாக இருந்த நிலையில் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்தனர்.

இந்த படத்தை ஐசரி கணேஷ் மிகப் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரித்தார். படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்க்க தற்பொழுது பொதுமக்களும், ரசிகர்களும் திரையரங்கை நாடி வருகின்றனர்.

இதனால் இந்த படத்தின் வசூலும் தற்போது அதிகரித்தே காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் மூன்று நாள் முடிவில் மட்டும் தமிழகத்தில் சுமார் 26 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்னமும் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது வரையுமே படக்குழு எதிர்பார்த்த வசூலை அள்ளி உள்ளது இதனால் படகுழுவும் சரி, சிம்புவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் ரசிகர்களும் மாநாடு படத்தை விட இந்த படம் அதிக வசூலை அள்ளும் என கூறி வருகின்றனர்.

Leave a Comment