“கைதி” படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்திக்கு போன் போட்ட சிம்பு..! என்ன சொன்னார் தெரியுமா.?

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்பதால் தற்பொழுது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் இவர் நடிப்பில் தற்பொழுது விருமன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விருமன் படத்தில் அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், சூரி, சிங்கம் புலி, மனோஜ், மைனா நந்தினி என ஒரு மிகப்பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்து உள்ளது படம் கிராமத்து கதை என்பதால் ரசிகர்களிடம் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

இதுவரை மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 44 கோடி வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அதாவது கார்த்தி நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி இந்த படத்தில் ஒரு பாட்டு கிடையாது ஹீரோயின் கிடையாது இருந்தாலும்..

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் இசையமைப்பாளர் சாங் சி எஸ் இசையமைத்திருந்தார் இந்த படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் கைதி படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிம்பு மிரண்டு போனாராம் மேலும் நடிகர் கார்த்திக்கு போன் செய்து ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசினாராம் மேலும் கார்த்திகே நோட் பண்ணாத அளவிற்கு சிம்பு சில விஷயங்களை நோட் செய்து கார்த்தியிடம் சொல்லி பாராட்டி உள்ளார். இத்தனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

Leave a Comment